
செய்திகள் இந்தியா
பாகிஸ்தானைப் போல் இந்தியாவில் மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன: ராகுல்
லண்டன்:
பாகிஸ்தானில் உள்ளதுபோன்று இந்தியாவிலும் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகள் மூலமாக மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, "இந்தியாவுக்கான யோசனைகள்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில்,
பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆன்மா கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. பாகிஸ்தானில் உள்ளது போன்று இந்தியாவிலும் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகள் மூலமாக மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. அரசு சொல்வதைக் கேட்க மட்டுமே வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.
"அனைவருக்கும் சமவாய்ப்பு, மக்களுடனான பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்னைகளுக்குத் தீர்வு' என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்தியாவை நிலவியல் அமைப்பாக மட்டுமே பார்க்கின்றன. அதன் காரணமாகத்தான், ஒரு சிலருக்கு மட்டும் பலன்கள் சென்றடைய வழி செய்கின்றன" என்றார்.
மேலும், இந்திய வெளியுறவு கொள்கை குறித்து பேசிய ராகுல் காந்தி, "சில ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேசும்போது, இந்திய வெளியுறவு நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டுள்ளது. நாங்கள் கூறுவது எதையும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் கவனிப்பதே இல்லை. திமிர்பிடித்தவர்களாக உள்ளனர். எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதில்லை என்று தெரிவித்தனர்' என்றார்.
ஜெய்சங்கர் பதில்: ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், "ஆம். இந்திய வெளியுறவு கொள்கை மாறிவிட்டது உண்மைதான். அரசின் உத்தரவுகளை மட்டுமே வெளியுறவு அதிகாரிகள் கேட்டு நடப்பர். மற்றவர்களின் கருத்துக்கு அவர்கள் உரிய பதிலளிப்பர். அதனை திமிர்பிடித்தவர்கள் என்று கூறக்கூடாது. உறுதிப்பாடு என்றுதான் கூறவேண்டும். தேசத்தின் நலனை பாதுகாத்தல் என்றும் கூறலாம்' என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm