செய்திகள் இந்தியா
சீனாவின் பாலத்தைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராகுல் கண்டனம்
புது டெல்லி:
கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டுவதற்கு எதிராக ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரை பதிவில், "பாங்காங்கில் முதல் பாலத்தை சீனா கட்டுகிறது என்ற செய்தி வந்தபோதும், நிலைமையை கண்காணித்து வருவதாக ஒன்றிய அரசு கூறியது. இப்போது இரண்டாவது பாலத்தை சீனா கட்டும்போதும் அதே போல கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது.
"இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எவ்விதமான விட்டுக்கொடுக்கும் போக்கும் இருக்கக் கூடாது.
"இதுபோன்ற விஷயங்களில் உரிய நேரத்தில் சரியான பதிலடியை அளிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டியது பிரதமரின் முக்கியமான கடமை. ஆனால், மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am