
செய்திகள் இந்தியா
சீனாவின் பாலத்தைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராகுல் கண்டனம்
புது டெல்லி:
கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டுவதற்கு எதிராக ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரை பதிவில், "பாங்காங்கில் முதல் பாலத்தை சீனா கட்டுகிறது என்ற செய்தி வந்தபோதும், நிலைமையை கண்காணித்து வருவதாக ஒன்றிய அரசு கூறியது. இப்போது இரண்டாவது பாலத்தை சீனா கட்டும்போதும் அதே போல கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது.
"இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எவ்விதமான விட்டுக்கொடுக்கும் போக்கும் இருக்கக் கூடாது.
"இதுபோன்ற விஷயங்களில் உரிய நேரத்தில் சரியான பதிலடியை அளிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டியது பிரதமரின் முக்கியமான கடமை. ஆனால், மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 11:22 pm
நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் நகராக அறிவிப்பு
July 3, 2022, 6:56 pm
நுபுர் சர்மாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அளித்த கடும் கண்டனங்கள்: முழு விவரம்
July 3, 2022, 5:01 pm
இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
July 1, 2022, 8:19 pm
கேரளத்தில் ஆந்த்ராக்ஸ் பரவல்
July 1, 2022, 8:13 pm
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்
July 1, 2022, 7:54 pm
இந்திய அரசின் மொத்த கடன் அதிகரிப்பு
July 1, 2022, 12:04 am
ராஜஸ்தான் தையல்காரர் கொலை வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்
June 30, 2022, 10:52 pm