செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தலில் 8 நாளில் 8% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்
கோலாலம்பூர்:
கெஅடிலான் தேர்தலில் 8 நாளில் 8 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் ஜலிஹா முஸ்தபா கூறினார்.
கெஅடிலான் கட்சி தேர்தலின் வாக்களிப்பு இணையம் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மே 18ஆம் தேதி தொடங்கி 67,149 பேர் இணையம் வாயிலாக வாக்களித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்கள் கூட இணையம் வாயிலாக வாக்களித்துள்ளனர்.
இணையத்தின் வாயிலாக வாக்களிக்க 76,926 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்று நள்ளிரவு வரை அவர்கள் வாக்களிக்கலாம்.
இத் தேர்தலில் இதுவரை மொத்தமாக 90,304 பேர் வாக்களித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் கணக்கிட்டால் இதுவரை 8 சதவீதம் பேர் மட்டுமே இக் கட்சி தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
இவ்வாண்டு கட்சி தேர்தலில் வாக்களிக்க 1,118,423 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
ஆனால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
கிளந்தான், திரெங்கானு, ஜொகூர், கெடா, பகாங், கோலாலம்பூர், பெர்லிஸ், நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு ஆகிய 10 மாநிலங்களில் இருந்து 20,813 பேர் நேரடியாக வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
