செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தலில் 8 நாளில் 8% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்
கோலாலம்பூர்:
கெஅடிலான் தேர்தலில் 8 நாளில் 8 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் ஜலிஹா முஸ்தபா கூறினார்.
கெஅடிலான் கட்சி தேர்தலின் வாக்களிப்பு இணையம் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மே 18ஆம் தேதி தொடங்கி 67,149 பேர் இணையம் வாயிலாக வாக்களித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்கள் கூட இணையம் வாயிலாக வாக்களித்துள்ளனர்.
இணையத்தின் வாயிலாக வாக்களிக்க 76,926 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்று நள்ளிரவு வரை அவர்கள் வாக்களிக்கலாம்.
இத் தேர்தலில் இதுவரை மொத்தமாக 90,304 பேர் வாக்களித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் கணக்கிட்டால் இதுவரை 8 சதவீதம் பேர் மட்டுமே இக் கட்சி தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
இவ்வாண்டு கட்சி தேர்தலில் வாக்களிக்க 1,118,423 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
ஆனால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
கிளந்தான், திரெங்கானு, ஜொகூர், கெடா, பகாங், கோலாலம்பூர், பெர்லிஸ், நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு ஆகிய 10 மாநிலங்களில் இருந்து 20,813 பேர் நேரடியாக வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 8:16 am
ரஷ்யாவுடன் நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயணம்: புடினிடம் அன்வார் கோரிக்கை
September 12, 2026, 11:21 pm
உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தைரியம் இருந்தால், அதை விரைவாகச் செய்யுங்கள்: ஜாஹித்
September 12, 2026, 11:20 pm
நம்பிக்கை, சேவை, ஒற்றுமை இந்திய சமூகத்தை வலுப்படுத்த வழிகாட்டும்: டத்தோ சிவக்குமார்
September 12, 2026, 5:21 pm
அரசியல் அல்ல, நேர நெருக்கடியே காரணம்: பிரதமரின் தமிழக பயணம் ரத்தானது குறித்து டத்தோஸ்ரீ ரமணன் முற்றுப்புள்ளி
September 12, 2026, 4:56 pm
குறைக்கடத்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசியாவும் இந்தியாவும் விருப்பம்
September 12, 2026, 4:49 pm
அரசாங்கத்தில் பதவிகளில் இல்லாததால் மஇகா பலவீனமாகிவிட்டது என்று அர்த்தமல்ல: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 12, 2026, 2:38 pm
