நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி

கோலாலம்பூர்:

சர்ச்சைக்குரிய  தமீம் டஹாரி மீது மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அண்டை நாட்டில் இருப்பதாக நம்பப்படும் தமீனை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர தாய்லாந்து அதிகாரிகளுடன் போலிசார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

எங்களுக்குக் கிடைத்த கடைசித் தகவல் என்னவென்றால், அவர் நமது அண்டை நாடான தாய்லாந்தில் இருந்தார்.

அவர் மீண்டும் அழைத்து வரப்பட்டு குற்றம் சாட்டப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பை நாடுவோம்.

இந்து மதத்தின் புனித சின்னத்தை சேதப்படுத்தியதாகக் கூறி தமீன் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295 இன் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset