செய்திகள் மலேசியா
மலேசிய காரில் கடத்தப்பட்ட 18 கிலோ ஹெராயின் சிங்கப்பூரில் பறிமுதல்
ஜோகூர்:
மலேசியாவில் இருந்து வந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்பு முகமை பறிமுதல் செய்தது.
கடந்த இருபது ஆண்டுகளில் ஒரே சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக மதிப்புள்ள போதைப்பொருள் இதுதான் அந்த முகமை தெரிவித்துள்ளது.
இந்தக் கடத்தல் தொடர்பாக 23 முதல் 28 வயதுக்குட்பட்ட மூன்று மலேசிய ஆடவர்கள் கைதாகினர்.
புதன்கிழமை அன்று நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது அந்த காரில் இருந்து 17.7 கிலோ ஹெராயின், 261 கிராம் crystal methamphetamine, 2 கிராம் ecstasy மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த காரின் ஓட்டுநர் உடனடியாக தடுத்து வைக்கப்பட்டார். அவரிடம் இருந்து அந்த போதைப்பொருள்களை வாங்க இருந்ததாக நம்பப்படும் இரு ஆடவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.
அங்கு போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
15 கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் அல்லது 250 கிராம் methamphetamine கடத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்படும்.
கடந்த காலங்களில் வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தை மதிப்பு 4.4 மில்லியன் ரிங்கிட் என சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 10:51 am
பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை ஜம்ரி வினோத் மறுத்தார்
March 17, 2026, 10:34 am
தேடலில் கிடைத்தது இஸ்லாம்: ஒரு பெண்ணின் உணர்ச்சி பயணம்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
