செய்திகள் உலகம்
ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப்படாது: துருக்கி அதிபர்
அங்காரா:
ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப் போவதில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடர்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நேட்டோ அமைப்பில் இணையப்போவதாக ஃபின்லாந்தும் ஸ்வீடனும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கியின் அதிபர் எர்டோகன் கூறுகையில்,
ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதை துருக்கி அனுமதிக்காது.
காரணம், அந்த இரு நாடுகளும் துருக்கியில் உள்ள குர்து கிளர்ச்சியாளர்களுக்கு புகலிடம் அளித்து வருகின்றன என்றார் அவர்.
துருக்கிக்கு எதிராக பல்வேறு ஐரேப்பிய நாடுகள் ஆயுத வர்த்தகத் தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முஹம்மத் முய்சுவின் கட்சி அமோக வெற்றி
April 22, 2024, 10:12 am
இஸ்ரேல் தாக்குதலில் 18 குழந்தைகள் உயிரிழப்பு
April 21, 2024, 4:55 pm
டிரம்ப் ஆதரவாளர் தீயிட்டு தற்கொலை
April 21, 2024, 1:29 pm