
செய்திகள் இந்தியா
WHO சீரமைக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி
புது டெல்லி:
உலக சுகாதார அமைப்பு WHO சீரமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பான 2ஆவது சர்வதேச மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது.
அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றின் சர்வதேச விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச அளவில் சுகாதாரப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்களைப் புகுத்த வேண்டும்.
உலக வர்த்தக அமைப்பின் விதிகள், அறிவுசார் சொத்துகளின் காப்புரிமை சார்ந்த வர்த்தக விதிகள் ஆகியவை மேலும் எளிமையாக்கப்பட வேண்டும். மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவை அனைத்து நாடுகளுக்கும் சமமாகக் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 90 சதவீத இந்தியர்கள் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் பாரம்பரிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 8:12 pm
டெல்லிக்கு புறப்படவிருந்த நான்கு சென்னை விமானங்கள் ரத்து
May 22, 2022, 1:42 pm
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு: கேரள அரசியல் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு
May 22, 2022, 12:26 pm
பாகிஸ்தானைப் போல் இந்தியாவில் மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன: ராகுல்
May 22, 2022, 12:04 pm
பொது மக்களின் எதிர்ப்புக்கு பணிந்தது இந்திய அரசு: பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது
May 22, 2022, 11:54 am
ம.பி.: உன் பெயர் முஹம்மதா என கேட்டு வயதானவரை அடித்து கொன்ற பாஜக நிர்வாகி
May 21, 2022, 5:52 pm
ஞானவாபி வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
May 21, 2022, 4:28 pm
ரயில்வே துறையில் வேலைக்காக லஞ்சமாக நிலம்: லாலு பிரசாத் மீது சிபிஐ புதிய பதிவு
May 21, 2022, 4:08 pm
எங்களுக்கு மன்னிக்கும் மாண்பைக் கற்றுக்கொடுத்தவர் என் தந்தை: ராகுல் காந்தி உருக்கம்
May 21, 2022, 3:04 pm