செய்திகள் இந்தியா
வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வலியுறுத்தல்
புது டெல்லி:
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் 9 மாத இடைவெளிக்கு முன்னரே 3ஆவது தவணை கொரோனா தடுப்பூசியான பூஸ்டரை செலுத்திக் கொள்ள இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 18 வயதைக் கடந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 மாதங்களுக்குப் பிறகே 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.
அதன் காரணமாக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்களால் 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத சூழல் உருவானது.
அதைக் கருத்தில்கொண்டு 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இடைவெளியைக் குறைக்க வேண்டுமெனப் பலரது தரப்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியக் குடிமக்களும் மாணவர்களும் அந்நாடுகளின் விதிமுறைகளின்படி இனி முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
