செய்திகள் இந்தியா
வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வலியுறுத்தல்
புது டெல்லி:
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் 9 மாத இடைவெளிக்கு முன்னரே 3ஆவது தவணை கொரோனா தடுப்பூசியான பூஸ்டரை செலுத்திக் கொள்ள இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 18 வயதைக் கடந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 மாதங்களுக்குப் பிறகே 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.
அதன் காரணமாக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்களால் 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத சூழல் உருவானது.
அதைக் கருத்தில்கொண்டு 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இடைவெளியைக் குறைக்க வேண்டுமெனப் பலரது தரப்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியக் குடிமக்களும் மாணவர்களும் அந்நாடுகளின் விதிமுறைகளின்படி இனி முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 29, 2026, 10:31 am
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
June 28, 2026, 4:04 pm
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
