
செய்திகள் வணிகம்
உள்நாட்டு நேரடி முதலீடுகள் வரவேற்று ஊக்குவிக்கப்படும்: பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, உள்நாட்டு நேரடி முதலீடுகள் வரவேற்று ஊக்குவிக்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இது மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில் சபை பொருளாதார மீட்சி தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் நன்கு ஆராயும் என்றும், குறிப்பாக, உள்நாட்டு நேரடி முதலீடுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
"பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டப் பிரிவு, நிதி அமைச்சு, அனைத்துலக வாணிப மற்றும் தொழில் அமைச்சு ஆகியவை தேசிய வர்த்தக சபையின் பரிந்துரைகளை மேலும் செம்மைப்படுத்தும்.
"நாடு தற்போது தொற்றுடன் வாழப் பழகும் endemic கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில், உள்நாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதும் ஒன்றாகும்.
"பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் தற்போது மிகச்சிறப்பான நிலையில் உள்ளது. தொழில் துறை தொடர்பான விவகாரங்களை எளிமைப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.
"மலேசிய குடும்பம் என்ற கோட்பாட்டின் நலன் கருதி முன்வைக்கப்படும் அனைத்து ஆலோசனைகளையும் அரசாங்கம் செவிமடுக்கும்," என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 20, 2022, 8:11 pm
உக்ரைன் ஏற்றுமதிக்கு ரஷியா நிபந்தனை
May 20, 2022, 7:24 pm
கார், செல்போன் இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை
May 19, 2022, 8:17 pm
இந்தியா ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
May 19, 2022, 11:49 am
மார்ச் 2020 க்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கெட்டின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது
May 19, 2022, 9:37 am
Ketum இலைகள் ஏற்றுமதி: பரிந்துரை ஆவணத்தை தயாரித்தது கெடா அரசு
May 16, 2022, 1:01 pm
தங்கத்தின் விலை குறையலாம்
May 5, 2022, 4:30 pm
இந்தியாவில் வீட்டு, வாகனக் கடனுக்கான வட்டி கடுமையாக உயருகிறது
May 4, 2022, 11:04 am
சரவாக் பாமாயில் துறையில் 45,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறை
April 28, 2022, 7:40 am