செய்திகள் மலேசியா
நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு மக்களுக்கு மிகவும் முக்கியமானது: பாஸ்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டிலேயே கழிக்க அனுமதிக்கும் இந்த நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களுக்கும் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றம் என்று பாஸ் கட்சி விவரித்துள்ளது.
இந்த முடிவிற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு கட்சி தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாக பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் கூறினார்.
இந்த முன்னேற்றம் நஜிப்பின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கு வளர்ச்சியையும் மக்களுக்கு செழிப்பையும் கொண்டு வந்த ஒரு தலைவராக அவரது சேவைகளையும் பங்களிப்புகளையும் எப்போதும் நினைவுகூர்ந்து பாராட்டும் அனைத்து மலேசியர்களுக்கும் மிகவும் முக்கியமானது.
நஜிப் தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டில் கழிக்கும்போது, அவர் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று பாஸ் மேலும் பிரார்த்திக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
முன்னாள் அம்னோ தலைவர் தனது யோசனைகள், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை நாட்டின் நன்மைக்காக தொடர்ந்து பங்களிக்க முடியும் என்ற பாஸ் கட்சியின் நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 10:15 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கிய மாமன்னருக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 18, 2026, 9:32 pm
டத்தோஸ்ரீ நஜிப்பின் மன்னிப்பை அரசியலாக்க வேண்டாம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 18, 2026, 5:06 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு: மாமன்னருக்கு மஇகா, மசீச நன்றி
September 18, 2026, 5:05 pm
பாறை இடிந்து விழுந்து இந்திய ஆடவர் மரணம்; குவாரி செயல் பாட்டை தற்காலிகமாக மூட உத்தரவு: டத்தோ சிவநேசன்
September 18, 2026, 5:03 pm
நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்: ரபிசி
September 18, 2026, 5:03 pm
