செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு: மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி
கோலாலம்பூர்:
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
நாட்டின் பேரரசர், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தலைமையில் நடைபெற்ற மன்னிப்பு வாரிய கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுகப்பட்டது
இந்த மன்னிப்பு சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு மட்டுமே உட்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தொகையான 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை நஜிப் ரசாக் செலுத்த வேண்டும்
மேலும், 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை அவர் வீட்டுக் காவலில் இருக்க வேண்டும்.
அரசாங்கம் விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் நஜிப் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளில் எதையேனும் அவர் மீறினால் பொதுமன்னிப்பு தானாகவே ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 12:51 pm
மலேசிய தங்க விழாவின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் காண்கிறது: டத்தோ அப்துல் ரசூல்
September 18, 2026, 12:04 pm
60,000 வருகையாளர்கள் என்ற இலக்குடன் பெர்கேசோவின் மெகா iLINDUNGu விழா கோத்தா டாமன்சாரா ஸ்ட்ராண்ட் மாலில் தொடங்கியது
September 18, 2026, 12:03 pm
தூங்கிக்கொண்டிருந்த மைத்துனரை மூன்று முறை கத்தியால் குத்திய பதின்ம வயது இளைஞருக்கு ஏழு நாட்கள் நீதிமன்றக் காவல்
September 18, 2026, 11:58 am
சிட்னிக்குச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் மருத்துவ அவசரநிலை: பயணி ஒருவர் உயிரிழப்பு
September 18, 2026, 11:06 am
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும்: வழக்கறிஞர் ரொஸ்லி டஹ்லான் கருத்து
September 18, 2026, 10:35 am
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
