நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய தங்க விழாவின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் காண்கிறது: டத்தோ அப்துல் ரசூல்

கோலாலம்பூர்:

மலேசிய தங்க விழாவின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் காண்கிறது.

மலேசிய தங்க சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் இதனை கூறினார்.

மலேசிய தங்க விழா இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறுகிறது.

மலேசிய தங்க வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ லூய்ஸ் எங் தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது.

சுற்றுலாத் துறை துணையமைச்சர் சியூ சூன் மான் இவ்விழாவை தொடங்கி வைத்தார்.

கிட்டத்தட்ட 70க்கும் மேற்ப்பட்ட உள்ளூர் அனைத்துலக நகை வணிக நிறுவனங்கள் இங்கும் முகாமிட்டுள்ளன.

இவ்விழா மலேசியாவுக்கு மிகப் பெரிய பெருமைச் சேர்த்துள்ளது.

குறிப்பாக உலக ரீதியிலான தங்க
வணிகர் இங்கு ஒன்றுக் கூடி உள்ளனர். 

இவ்விழா மலேசிய தங்க நகை வணிகர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.

குறிப்பாக மலேசிய தங்க வணிகம் இம்மாநாட்டின் வாயிலாக விரிவாக்கம் கண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset