நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மந்திரி பெசார், மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒருதலைபட்சமாக நெகிரி செம்பிலான் ஆட்சியாளரை நீக்க அதிகாரம் இல்லை: AGC அலுவலகம் விளக்கம் 

கோலாலம்பூர்: 

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒருதலைபட்சமாக மாநில ஆட்சியாளரை நீக்கும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்று தேசிய சட்டத்துறை அலுவலகம் தெரிவித்தது 

இந்த விவகாரம் தொடர்பான பிரகடனத்தின் செல்லுபடியாகும் தன்மையும் சட்டத்திற்கு இணங்க, குறிப்பாக 1959 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின்படி, ஒரு செல்லுபடியான அரசியலமைப்பு மற்றும் சட்ட செயல்முறையின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரகடனம் என்பது செல்லாது என்றும் அது 1959ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பு சட்டத்தின் 10ஆவது விதியின் கோரிக்கையை நிறைவு செய்யவில்லை என்று AGC அலுவலகம் சொன்னது. 

10ஆவது விதியின் கீழ் உள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை DATO DATO UNDANG தரப்புகள் நடவடிக்கைகள் எடுக்கும் முன் சரிபார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset