நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்

கோலாலம்பூர்: 

கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு காலை 9.42 மணிக்கு வெளியேறினார். 

காலை 7.48 மணிக்கு அவரின் வாகனம் இஸ்தானா நெகாராவிற்குள் நுழைந்த நிலையில் தற்போது அவரின் வாகனம் வெளியாகியுள்ளது 

கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் தற்போது கூட்டம் நிறைவு பெற்றதாக தெரிகிறது 

இருப்பினும், பொது மன்னிப்பு வாரியம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை

செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து  முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் துன் ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்கும் விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset