நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும்: வழக்கறிஞர் ரொஸ்லி டஹ்லான் கருத்து 

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை நீக்கும் பிரகடனம் குறித்து மாநில அரசாங்கத்தின் அறிக்கை என்பது அரசியலமைப்பு எதிரானது என்று நேற்று தேசிய சட்டத்துறை அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெளிவுப்படுத்தியது 

இதற்கு பொறுப்பேற்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும் என்று வழக்கறினர் ரொஸ்லி டஹ்லான் வலியுறுத்தியுள்ளார் 

மேலும்,  YANG DI-PERTUAN BESAR  பதவியிலிருந்து துவாங்கு முஹ்ரிஸை நீக்கிய பிரகடனத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற இஸ்மாயிலின் கோரிக்கைக்கு எதிராக மாநில நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று நேற்று மாநிலச் செயலாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பை ரோஸ்லி டஹ்லான் குறிப்பிட்டார்.

இஸ்மாயில் லாசிம் மாநில அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார். இதனால் அவர் மந்திரி பெசார் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

ஒரு மாநில ஆட்சியாளரை நீக்க மாநில நிர்வாக ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை. மேலும், ஏப்ரல் 19ஆம் தேதி துவாங்கு முஹ்ரீஸை நீக்கம் செய்த 4 உண்டாங் அவர்களின் நடவடிக்கையும் செல்லாது என்று AGC விளக்கம் அளித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset