நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13 மாத குழந்தை மரணம்:  குழந்தை பராமரிப்பாளர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார் 

ஆயர் ஹித்தாம்: 

பினாங்கு மாநில ஆயர் ஹித்தாமில் 13 மாத குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்திய முறையில் குழந்தையைக் கையாண்டதாக குழந்தை பராமரிப்பாளர் மீது இன்று இங்குள்ள நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இருப்பினும் 44 வயதுடைய நோராய்டா கைருடின் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார். 

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் ஐயர் இதாம் தாமான் தேசா மவார் பகுதியிலுள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழந்தையின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அவர், சிறுவனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a)இன் கீழ் தன் மீதான குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டு வருகிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இர்வான் சுவைன்போன் இந்த வழக்கின் விசாரணையைக் கையாண்டு வருகிறார்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்க்காக காத்திருக்கும் நிலையில், இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset