செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
சென்னை:
விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசாவை ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் 1-க்கு முன்பக்கம், தரை தளத்தில் ரூ.22.88 கோடியில் பயணிகள் வசதிக்காக பிக்கப் பாயின்ட் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது.
இதை ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
இந்த பிக்கப் பிளாசா, பயணிகளின் வசதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், டெர்மினல் முன்பகுதியில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் உதவும்.
டெர்மினல்களுக்கும், பல அடுக்கு வாகன நிறுத்தும் இடங்களுக்கும் இடையே பயணிகள் எளிதாக சென்று வருவதற்காக 15 பேட்டரி வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பு சோதனைக்கு பிந்தைய பகுதியில், நவீன டிராலிகளை வழங்குவதற்கான பணியும் நடக்கிறது. இந்த நவீன டிராலிகள், பயணிகள் தங்களது உடைமைகளுடன், எளிதாக நகர உதவுவதுடன், அவர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
5,000 வாடகைக் கார்கள்
சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் கூறும்போது, “டெர்மினல் 1-ல் இருந்து வாடகை காருக்காக இதுவரை, சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் சென்று, அதன்பின்பு லிப்டில் ஏறி, மேல் தளங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.
தற்போது டெர்மினல் 1-ல் இருந்து சுமார் 30 மீட்டரிலேயே, பிக்கப் பாயின்ட் பிளாசாவில் டாக்சி வசதி இருப்பதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் சுமார் 5,000 எல்லோ போர்டு வாடகை கார்களை, இந்தப் பகுதியில் கையாள முடியும். இதன் மூலம் பயணிகளின் சிரமம் குறைவதுடன், விமான நிலைய வாகன போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்படும். பயணிகளின் சேவையை மேம்படுத்துவதே எங்களுக்கு முக்கிய நோக்கம் ஆகும்” என்றார்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகைத் தளத்தில் எப்போதும் குழப்பமான போக்குவரத்து நிலவும். பெரும்பாலும் புதிய பயணிகள் எங்கு செல்வது, எப்படி செல்வது என்று தடுமாறி நிற்பார்கள். அந்த நிலை தொடராது என்று தாம் எதிர்பார்ப்பதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
தொடர் விடுமுறையால் திக்குமுக்காடிய சென்னை சாலைகள், பேருந்துகள்
September 11, 2026, 4:29 pm
பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90
September 10, 2026, 12:11 pm
தம்பி விஜய்யின் சைகையையும் மிசாவின் கைது குறித்தும் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு விளக்கம்
September 10, 2026, 10:41 am
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார்
September 9, 2026, 10:04 pm
தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமானது
September 9, 2026, 1:23 pm
