செய்திகள் தமிழ் தொடர்புகள்
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
திருச்சி:
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சி அமைக்க இடதுசாரிகள் ஆதரவு அளித்த நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்து போட்டியென்றும் முடிவு எடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக, அதிமுக, தவெக ஆகிய பிரதானக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இத்தொகுதியில் 4 முனைப்போட்டி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுசாரிகள் போட்டியிடுவது தேர்தல் களத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியின் பேசுகையில், “தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுராந்தகம் பற்றி சிபிஎம் மாநிலச் செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.
இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு பல்வேறு ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். தமிழ் மண்ணில் ஜனநாயகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60, 70 ஆண்டுகளாக பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது. சட்டமன்ற நாடாளுமன்ற விழுமியங்கள் எப்போதும் கட்டிக் காத்துள்ளது.
இப்போதுள்ள அரசியல் சூழலில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு செய்துள்ளோம். அதனால் இடதுசாரிகள் தனித்து களம் காண்கிறோம். வேட்பாளர்கள் அறிவிப்பு செப்.15 அன்று இருக்கும்” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 12, 2026, 10:57 pm
தொடர் விடுமுறையால் திக்குமுக்காடிய சென்னை சாலைகள், பேருந்துகள்
September 11, 2026, 4:29 pm
பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90
September 10, 2026, 12:11 pm
தம்பி விஜய்யின் சைகையையும் மிசாவின் கைது குறித்தும் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு விளக்கம்
September 10, 2026, 10:41 am
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார்
September 9, 2026, 10:04 pm
தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமானது
September 9, 2026, 1:23 pm
