நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளராக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் தொடர்ந்து நீடிப்பார் 

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் ஆட்சியாளராக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர்  தொடர்ந்து நீடிப்பார் என்று நீதி, சட்டம் பேரவை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. 

எந்தவொரு சட்டப்பூர்வமான முறையும் பின்பற்றப்படாமல் அவரது பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை என்று பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியிடப்பட்ட அரசப் பிரகடனம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லாது என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை பேரவை மீண்டும் தீவிரமாக வலியுறுத்தியுள்ளது.

தவறான முறையில் தயாரிக்கப்பட்ட அந்தப் பிரகடனம் ஆரம்பம் முதலே சட்டத்திற்குப் புறம்பானதாகவும் குறையுடையதாகவும் உள்ளதாக பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்துப் பிரகடனங்களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset