நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

860.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தாபோங் ஹாஜி சொத்துக்களை விற்பனை செய்தது தொடர்பான 3 குற்றச்சாட்டுகளின் கீழ் ஜமீல் கிர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

கோலாலம்பூர்:

பிரதமரின் துறையின் மத விவகாரங்கள் முன்னாள் அமைச்சரான டத்தோஸ்ரீ ஜமீல் கிர் பஹாரோம் மீது, 2015, 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 860.3 மில்லியன் ரிங்கிட்டும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை தாபோங் ஹாஜி மூலம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ், இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

65 வயதான ஜமீல் கிர், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லி அஹ்மத் முன்னிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.

குற்றச்சாட்டின்படி, ஜமீல் கிர், 860,308,770.51 ரிங்கிட் பணத்தை அல்-ரவ்தா ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் அண்ட் ப்ராஜெக்ட்ஸ் மேனேஜ்மென்ட் கோ லிமிடெட் நிறுவனத்திற்கு தாபோங் ஹாஜி மூலம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

முதல் குற்றச்சாட்டின்படி, அவர் 42,942,074 ரிங்கிட் பணத்தை தாபோங் மூலம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது குற்றச்சாட்டில் 288,172,134.64 ரிங்கிட் தொகையும், மூன்றாவது குற்றச்சாட்டில் 529,194,561.87 ரிங்கிட் தொகையும் சம்பந்தப்பட்டிருந்தன.

இந்தக் குற்றம், பிரதமரின் துறையின் மத விவகாரப் பிரிவில் உள்ள அவரது அலுவலகத்திலும், கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்திலும், புத்ராஜயா இஸ்லாமிய வளாகத்திலும், முறையே 3 ஏப்ரல் 2015, 14 டிசம்பர் 2016 மற்றும் 17 ஆகஸ்ட் 2017 ஆகிய தேதிகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 403-இன் கீழ் கொண்டுவரப்பட்டன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இப்பிரிவின்படி ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset