செய்திகள் உலகம்
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
ரியாத்:
ஈரான்-அமெரிக்கா போர், சவுதி அரேபியா மீதான ஹவுதி போராளர்களின் தாக்குதல் காரணமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டி உள்ளது.
மத்திய கிழக்கில் தீவிர மடைந்து வரும் ஈரான்-அமெரிக்கா இடையேயான நேரடி ராணுவ மோதலும், அதன் நீட்சியாக சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி போராளிகள் நடத்தியுள்ள அதிரடித் தாக்குதல்களும் உலகளவில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த தாக்குதல்களின் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டாலரைத் தாண்டியது.
பின்னர் அது சற்று குறைந்து ஒரு பேரலுக்கு 99.90 டாலராக சரிந்தாலும், மத்திய கிழக்கில் புதிய பதற்றங்கள் உருவானால் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஈரான்-அமெரிக்கா போர் தொடங்கியதிலிருந்து எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
