நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காதல் வலையில் சிக்கி அந்தரங்க ஆபாசப் படங்களை எடுக்காதீர்கள்: மோசடிகள் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் அந்தரங்க ஆபாசப் படங்களை வைத்து மிரட்டும் மோசடிகள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது.

கடந்த மாதம் மட்டும் குறைந்தது 52 புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்த மோசடியில் 134,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

பெரும்பாலான சம்பவங்களில் மோசடிக்காரர்கள் இணைதேடும் செயலிகள் அல்லது சமூக ஊடகம் வழி தொடர்புக்கொள்கின்றனர்.

அவர்கள் பின்னர் உரையாடல் செயலிகளில் பேச அழைப்பார்கள்.

அதில் நடத்தப்படும் ஆபாசக் காணொலி அழைப்புகள், பகிரப்படும் ஆபாசப் படங்களை மோசடிக்காரர்கள் பதிவுசெய்து வைத்திருப்பார்கள்.

பணம் கொடுக்கவில்லையென்றால் அவற்றை வெளியிடப்போவதாக மிரட்டுவார்கள்.

பாதிக்கப்பட்டோர் பணம் கொடுத்தபிறகும் மிரட்டல் பெரும்பாலும் தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.

இணையத்தில் சிறிதுகாலம் மட்டுமே பழகியவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டாம் என்று சிங்கப்பூர் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது. காதல் வயப்பட்டு உங்கள் அந்தரங்கங்களை இணையத்தில் காட்டி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset