நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் லாரி, கார் மோதி கொடூர விபத்து: நால்வர் பரிதாபமாக பலி 

கோத்தா கினபாலு:

சபாவின் தெலுபிட்-சண்டாகான் சாலையில் இன்று காலை இடம்பெற்ற கொடூரச் சாலை விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை சுமார் 7.30 மணியளவில் லாரி ஒன்றும் புரோட்டான் சாகா காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

காரில் பயணம் செய்த நான்கு பேரும் விபத்தின் தீவிரத்தால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர்.

இவ்விபத்தில் காரில் இருந்த நால்வரும் பலியான வேளையில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து பெலூரான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் நுர் அஸ்லான் ஷா ஜமாலுதீன் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விபத்து நடந்த பகுதியில் தொலைபேசி அலைவரிசை இல்லாத காரணத்தால், உடனடித் தகவல்களைப் பரிமாறுவதில் சிரமம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனால் பலியான நான்கு பேரின் முழுமையான விவரங்களும் உடனடியாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும், அதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset