நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு விமானி கைது

ஜாகர்த்தா:

ஜாகர்த்தாவில் சுமார் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மலேசிய துணை விமானியுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் போலிஸ் மேலும் ஒரு விமானியைக் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய சந்தேக நபரான 30 வயதுகளில் உள்ள இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு கிளாங் பள்ளத்தாக்கில் கைது செய்யப்பட்டார்.

இவர், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட துணை விமானி பணி புரியும் விமான நிறுவனத்திலிருந்து வேறுபட்ட ஒரு விமான நிறுவனத்தில் பணி புரிகிறார்.

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான், இந்த விமானி, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய பணத்தைக் கையாள்வதில் பங்கு வகித்ததாக நம்பப்படுவதாகக் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் இரண்டாவது அதிகாரிக்கும் இடையிலான பணப் பரிமாற்றத்தில் இரண்டாவது விமானியும் ஈடுபட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய கைதுகளுடன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset