செய்திகள் மலேசியா
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டார்
கோலாலம்பூர்:
டிக்டாக்கில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது ஹில்மன் இதாம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கின் முதல் கட்டத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஹசன் பஸ்ரி, அந்த பெர்சத்து அர்மாடா தலைவரை விடுவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது டிக்டாக் கணக்கில் பதிவேற்றிய ஒரு அறிக்கை மூலம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முகமது ஹில்மன் இதாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 574) பிரிவு 505(பி)-இன் கீழ், மாஜிஸ்திரேட் அமிரா அப்துல் அஜீஸ் முன்னிலையில் முகமது ஹில்மன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
alfah.channel.tv' என்ற டிக்டாக் கணக்கில், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி, பொது ஒழுங்கிற்கு எதிரான குற்றத்தைச் செய்ய எந்தவொரு நபரையும் தூண்டக்கூடிய கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 12:13 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் வருகையால் தமிழக முதலமைச்சர் விஜய்யின் இங்கிலாந்து பயணம் தள்ளிவைப்பு?
September 9, 2026, 11:58 am
துவாங்கு முஹ்ரிஸை பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக ஜாஹித் கூறியது உண்மைக்கு புறம்பானது: மந்திரி புசார்
September 9, 2026, 10:52 am
ரொம்பினில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்
September 8, 2026, 9:38 pm
ஹெலிகாப்டர் விபத்து: டாக்டர் ஐனுல் மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்தனர்
September 8, 2026, 9:21 pm
அஜிஸ் ரஹீம் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது
September 8, 2026, 9:16 pm
