நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அஜிஸ் ரஹீம் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது

கோலாலம்பூர்:

முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜிஸ் அப்துல் ரஹீம் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் 2009-இன் கீழ் நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.

நீதிமன்ற அமைப்பின் மீதான ஆய்வின் அடிப்படையில், பாலிங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள அஜிஸ் மீது, காலை 9 மணிக்கு நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.

கடந்த ஆகஸ்ட் 27 அன்று, அந்த நிறுவனம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை தொடர்பான வெளிப்படுத்தல்களைத் தொடர்ந்து, விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அஜிஸ், முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் ஆகிய இருவரும் தலா ஏழு நாட்களுக்கு, அதாவது செப்டம்பர் 2 வரை, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset