நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2/2026 நாட்டின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது 

கோலாலம்பூர்: 

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரிடம் 2025ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசாங்கத்தின் நிதிநிலை தொடர்பான 2/2026 தலைமை தணிக்கையாளர் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மாநில அரசுகள் மற்றும் மாநில முகமைகளின் நிதிநிலை அறிக்கையும் பேரரசரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் நிர்வாகம் தொடர்பான அறிக்கைகளும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சரிபார்த்தார் என்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவித்தார். 

இங்குள்ள புகிட் துங்கு அரண்மனையில் பேரரசரைச் சந்தித்த தலைமை தணிக்கையாளர் டத்தோஸ்ரீ வான் சுராயா வான் முகமது ராட்ஸி இந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்.

நாட்டின் நிர்வாகத் திறன் மற்றும் நிதி மேலாண்மை அம்சங்களில் கொண்டுள்ள சிறப்பு கவனத்திற்கு ஏற்ப, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அறிக்கைகளை ஆய்வு செய்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset