செய்திகள் மலேசியா
இந்திய வர்த்தகர்களுக்காக 1 பில்லியன் ரிங்கிட் நிதியுடன் அதை நிர்வகிக்க புதிய செயலகத்தை பிரதமர் உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
கோலாலம்பூர்:
இந்திய வர்த்தகர்களுக்காக 1 பில்லியன் ரிங்கிட் நிதியுடன் அதை நிர்வகிக்க புதிய செயலகத்தை பிரதமர் உருவாக்க வேண்டும்.
மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை அண்மையில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகர்களின் நலனுக்காக பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் பேசப்பட்டது.
இந்திய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்களை மடானி அரசு செய்து வருகிறது.
குறிப்பாக இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக நிதிகளையும் ஒதுக்கி வருகிறது.
இந்த நிதிகள், கடனுதவி பல்வேறு வங்கிகள், இலாகாக்களின் கீழ் ஒதுக்கப்படுகிறது.
ஆனால் மைக்கியை பொருத்த வரையில் இந்திய வர்த்தகர்களுக்காக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்க வேண்டும்.
மேலும் இந்த நிதியை நிர்வகிக்க
புதிய செயலகத்தையும் பிரதமர் உருவாக்க வேண்டும்.
இப்போது கடனுதவி அல்லது உதவிகளை பெற வர்த்தகர்கள் பல அரசு ஏஜன்சிகளை நாட வேண்டியுள்ளது.
இவை அனைத்தும் ஒரே செயலக தளத்தில் அமைத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மைக்கியின் இந்த கோரிக்கை தாம் ஆய்வு செய்வதாக பிரதமர் கூறியதாக மைக்கி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 4:35 pm
பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் கோமாலி தோட்ட மக்களின் குரல்களை துணையமைச்சர் யுனேஸ்வரன் கேட்டறிந்தார்
September 8, 2026, 4:35 pm
செப்டம்பர் 19 என்பது பழம் கனிந்து பழுக்கும் நாள்; பழம் விழுவதற்காக காத்திருக்கிறோம்: அப்துல் ரவுஃப்
September 8, 2026, 4:33 pm
துன் ரசாக்கின் 3சி எச்சரிக்கைகளை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நினைவூட்டினார்
September 8, 2026, 2:55 pm
நீலாயில் 15 வயதுடைய இந்திய சிறுமி தனுஷா சந்திரமோகன் காணாமல் போன சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடும் போலிஸ்
September 8, 2026, 2:32 pm
மாற்றாந்தாய் மகள் குளிப்பதை எட்டிப் பார்த்த வளர்ப்பு தந்தை கைது: மூன்று நாட்கள் தடுப்புக் காவல் விதிப்பு
September 8, 2026, 12:43 pm
2/2026 நாட்டின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது
September 8, 2026, 12:16 pm
லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம்: ஜொகூர் மாநில வீட்டுவசதி வாரிய தலைவர் மீது 1.6 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு
September 8, 2026, 12:14 pm
