நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இராதாகிருஷ்ணன் தங்கவேலு கிண்ண கபடி போட்டி 2026: பூச்சோங் சீனப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது 

பூச்சோங்: 

கடந்தாண்டை போலவே இவ்வாண்டு இராதாகிருஷ்ணன் தங்கவேலு கிண்ண கபடி போட்டி நேற்று பூச்சோங் சன் மிங் சீனப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. ரசிகர்களின் பலத்த ஆதரவோடு நடைபெற்ற இந்த போட்டியில் பல மாநிலங்களில் இருந்து கபடி விளையாட்டாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்தியாவில் இருந்த இந்தியாவின் முன்னாள் கபடி வீரர்ரான மனதி கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இதில் ஆண்கள் பிரிவில் நடந்த கபடி போட்டியில் KSKP அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையில் SRI DEVI DRAGON (SD DRAGON), PERAK WHITE TIGERS அணிகள் முறையே இடம்பிடித்தன 

மேலும், பெண்கள் பிரிவில் LION 7 அணி சாம்பியன் பட்டத்தை வென்ற வேளையில் SRI DEVI அணி இரண்டாவது நிலையிலும் PERAK WHITE TIGERS KKBS அணி மூன்றாவது நிலையிலும் வென்றன. 

ஶ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் துவான் அப்பாஸ் சலிம்மி பின் சே அட்ச்மி இந்த இறுதிபோட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset