நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது

பேங்காக்:

60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் தங்கும் காலத்தை குறைத்து விதிமுறைகளில் அந்நாட்டு அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

தாய்லாந்து நாட்டுக்கு ஓராண்டுக்கு சுமார் 3 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். அதிகபட்சமாக மலேசியா, சிங்கப்பூர், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலானோர் சுற்றுலாச் செல்கிறார்கள்.

அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில்,  60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் 60 நாள்கள் வரை தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Money churners' Nearly 300,000 Malaysians visit Southern Thailand during  Raya Haji holidays, generating more than RM1bil baht | The Star

இந்த நிலையில், விசா இல்லாமல் தங்கும் காலத்தை 60 நாள்களிலிருந்து 30 நாள்களாக குறைத்து விதிமுறைகளில் தாய்லாந்து அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை வருகின்ற செப்டம்பர் 15 முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, ஜப்பான் உள்பட 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி 30 நாள்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்கிக் கொள்ள முடியும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset