செய்திகள் உலகம்
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
பேங்காக்:
60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் தங்கும் காலத்தை குறைத்து விதிமுறைகளில் அந்நாட்டு அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
தாய்லாந்து நாட்டுக்கு ஓராண்டுக்கு சுமார் 3 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். அதிகபட்சமாக மலேசியா, சிங்கப்பூர், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலானோர் சுற்றுலாச் செல்கிறார்கள்.
அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் 60 நாள்கள் வரை தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விசா இல்லாமல் தங்கும் காலத்தை 60 நாள்களிலிருந்து 30 நாள்களாக குறைத்து விதிமுறைகளில் தாய்லாந்து அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை வருகின்ற செப்டம்பர் 15 முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, ஜப்பான் உள்பட 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி 30 நாள்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்கிக் கொள்ள முடியும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
தக்காளியால் சிவந்த சாலைகள்: தக்காளிச் சண்டையில் 20,000 பேர்
August 30, 2026, 10:07 am
ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு
August 29, 2026, 4:48 pm
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: கிட்டத்தட்ட 3000 பேர் வரை காணவில்லை
August 29, 2026, 10:55 am
நார்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹாரல்ட் தனது 89ஆவது அகவையில் காலமானார்: நார்வே அரச மாளிகை அறிவிப்பு
August 29, 2026, 10:08 am
நேபாளம் - சீனா எல்லைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2,400ஐ தாண்டியுள்ளது
August 28, 2026, 4:24 pm
நேப்பாளப் பெருவெள்ளம்: US$31 மில்லியன் அவசர நிதி கோருகிறது அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம்
August 27, 2026, 8:55 pm
275 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 1500 பேரை காணவில்லை: நேபாள வெளியுறவு அமைச்சர் தகவல்
August 26, 2026, 8:54 pm
