நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு 

பெர்லின்: 

ஜெர்மனியில் வீசிய கடும் வெப்ப அலை காரணமாக 16,300 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே ஐரோப்பா முழுவதும் நிலவும் இந்த தீவிர வெப்ப அலை மற்றும் வறட்சிக்கு முக்கிய காரணம் என அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வாரம் ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்ட 15,800 உயிரிழப்புகள் என்ற புள்ளிவிவரம், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 23 வரையிலான கூடுதல் ஒரு வார காலத் தரவுகளின் அடிப்படையில் தற்போது 16,300 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்த அடுத்தடுத்த வெப்ப அலைகளால் 30,000-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

ஜெர்மன் பொது சுகாதார அதிகார அமைப்பின் கூற்றுப்படி, வெப்பம் தொடர்பான உயிரிழப்புகளில் அதிகப்படியானவை 75 வயதிற்கு மேற்பட்ட முதியோர் பிரிவிலேயே நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் 9,600 உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset