செய்திகள் மலேசியா
கண்மூடித்தனமாக ஆம்புலன்ஸை செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய விவகாரம்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
ஜாசின்:
கடந்த வாரம் கண்மூடித்தனமாக ஆம்புலன்ஸை செலுத்தி 18 வயதுடைய இளைஞரின் மரணத்திற்கான காரணமான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் அவர் இந்த குற்றங்களை மறுத்தார்.
கம்போங் ஆயர் மெர்பாவ் சமிஞ்கை விளக்கு சந்திப்பில் இந்த சாலை விபத்து நிகழ்த்து. இதில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அமிருல் அஷ்ராஃப் எனும் இளைஞர் ஆம்புலன்ஸை மோதி விபத்தில் பலியானார்.
10 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அளிக்க வழிவகை செய்யும் 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 41(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சந்தேக நபருக்கு மூவாயிரம் ரிங்கிட் பிணைத்தொகை அனுமதி வழங்கி மாஜிஸ்டிரெட் மஸானா சினின் ஜாமின் வழங்கினார்.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு நடவடிக்கைக்காக இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 17ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
