நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பொதுமன்னிப்புக்குத் தான் வழிவகுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார்.

மாறாக, ஒவ்வொரு கைதிக்கும் பொதுமன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்காக பொதுமன்னிப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உரிமை உண்டு.

கூட்டரசு அரசாங்க மட்டத்தில் பிரதமர், தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு ஒரு விண்ணப்பத்தை மதிப்பிடும் அதிகாரம் பொதுமன்னிப்பு வாரியத்திற்கு உள்ளது.

இறுதி முடிவு மாமன்னரிடம் உள்ளது என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு என்று நான் கூறினேன்.

மாமன்னரின் தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்காகத் தனது மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கும் உரிமை கொண்ட டத்தோஸ்ரீ நஜிப் உட்பட, அனைவருக்கும் அந்த உரிமையை நான் இப்போதும் ஆதரிக்கிறேன்.

இது நம்பிக்கை.கூட்டணியின் வேலை என்று கூறும் நமது முன்னாள் நண்பர்களிடமிருந்து மாறுபட்ட குரல்கள் எழுகின்றன.

பிரதமரான நான் கடுமையாகப் பேச விரும்பவில்லை. நான் விமர்சிக்கலாம். ஆனால் அது சரியல்ல.

அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு தெரியும்... நீங்கள் வாக்குகளைப் பெற விரும்பினால், அது ஏமாற்றுவதன் மூலம் அல்ல.

நான் தான் வழி வகுத்தேன் என்று பலர் கூறுகிறார். அது சரியல்ல என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset