நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி

ஈப்போ:


நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியை நிலை நாட்ட இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

பேரா மாநில ஐபிஎப் கட்சியின் 34ஆவது ஆண்டு பேரவை மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி பின் முகமட் இதனை கூறினார்.

நடந்து முடிந்த நெகிரி, ஜெகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்கு இளைஞர்கள் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவுக் கூர்ந்தார்.

தேசிய முன்னணி கூட்டணிக்கு 34 ஆண்டுகளாக தொடர்ந்து விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஆதரவளித்து வரும் ஐபிஎப் கட்சியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

ஐபி்எப் கட்சி இடைத்தேர்தல், மாநிலத் தேர்தல், பொதுத்தேர்தல் என பல்வேறு தேர்தல் காலகட்டங்களில் தேசிய முன்னணிக்கு உறுதியான ஆதரவை வழங்கி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐபிஎப் மிகப் பெரிய நிதி வளங்களைக் கொண்ட அரசியல் கட்சி அல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.

இருந்தபோதிலும், கட்சியின் தலைமைத்துவமும் உறுப்பினர்களும் தங்களால் இயன்ற அளவில் தொடர்ந்து களத்தில் இறங்கி தேசிய தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பணியாற்றி வருகின்றனர்.

இது அவர்களின் உண்மையான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது  என்றார்.

இதனைப் பாராட்டும் வகையில், ஐபி்எப் பேரா மாநிலத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கும், மாநிலம் முழுவதும் உள்ள பிரிவுகள் மற்றும் கிளைகளின் ஆண்டு கூட்டங்களை முன்னெடுப்பதற்கும், பேராக் தேசிய முன்னணி சார்பில் மாநில ஐபிஎப் கட்சிக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக டத்தோஸ்ரீ சாராணி அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset