நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சில சொத்துக்கள் இன்னும் முடக்கப்பட்டுள்ளதால், தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டில் கழிப்பதற்காக விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா இதனை தெரிவித்தார்.

தனது கட்சிக்காரர் சார்பாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறுகையில்,

தனது கட்சிக்காரரின் பெரும்பாலான சொத்துக்கள், வங்கிக் கணக்குகள், உடைமைகள் ஆகியவை அரசாங்கத்தின் முடக்குதல் உத்தரவுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு இன்னும் உட்பட்டுள்ளன.

அவற்றை அப்புறப்படுத்துவது தற்போதைக்கு அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்தார்.

அதன்படி, தனது கட்சிக்காரர் தற்போது ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும், நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியமான வழிகளைப் பரிசீலித்து வருவதாகவும் ஷஃபீ கூறினார்.

இதற்கிடையில், நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தப்படும் வரை, எங்கள் கட்சிக்காரர் காஜாங் சிறையில் இருக்கிறார்.

எங்கள் கட்சிக்காரரும் அவரது சட்டக் குழுவும் தற்போது நிபந்தனைகளையும் அவற்றின் நடைமுறை விளைவுகளையும் மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஒற்றுமையின் வெளிப்பாட்டால் எங்கள் கட்சிக்காரர் மிகவும் நெகிழ்ந்திருந்தாலும், கட்சி, அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அல்லது பொதுமக்கள் என யாரும் அவர் பெயரில் எந்தவொரு கடமையாலும் சுமையாகவோ அல்லது கட்டுப்பட்டதாகவோ உணர அவர் விரும்பவில்லை.

தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும், தத்தமது வசதிகளுக்கேற்பவும் ஆதரவையும் உதவியையும் வழங்க முன்வந்தவர்களுக்கு அவர் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.

அவர்களின் நேர்மை ஆரம்பம் முதல் இன்று வரை அவருக்கு அளவற்ற பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset