நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்

ஷாஆலம்:

போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் தனது முடிவு தொடர்பாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் விரைவில் அந்தோனி லோக்கை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜசெக பொதுச் செயலாளரின் கருத்துக்களைக் கேட்பதற்காக, லோக் ஷாங்காயில் தனது பணிகளை முடித்த பிறகு இந்தச் சந்திப்பை நடத்தலாம் என டத்தோஸ்ரீ அன்வார் பரிந்துரைத்தார்.

ஷாஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சீர்திருத்த முன்னோடிகள் சந்திப்பு உயர் தேநீர் விழாவில் கலந்துகொண்ட பிறகு, நான் அவரை முதலில் சந்தித்து, அவரது கருத்துக்களைக் கேட்பது சிறப்பாக இருக்கும்.என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.

அந்தோனி லோக்கின் ராஜினாமா கடிதம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

ஆனால் நேற்று ஜசெக்ச் தலைவர் அந்தக் கடிதம் தன்னிடம் விவாதிக்கக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அந்த கடிதம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. ஆக நேரம் கிடைக்கும்போது நாங்கள் சந்திப்போம் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset