நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாள வெள்ளப் பேரிடர்: மரண எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியது

நுவாகோட்:

இமயமலைப் பகுதியில் பனிப்பாறை சரிந்ததைத் தொடர்ந்து நேப்பாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை நேற்று 1,000-ஐத் தாண்டியது.

நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் சுமார் 100 தொழிலாளர்கள் உட்பட, உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் சீன மற்றும் நேபாள மீட்புக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.

நேப்பாளத்தில், பல சுரங்கப்பாதைகளில் சிக்கியிருப்பதாக நம்பப்படும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில், மீட்புக் குழுக்கள் மண், இடிபாடுகளின் குவியல்களை உடைக்க அகழ்விகள், துளையிடும் கருவிகள், வெடிபொருட்களைப் பயன்படுத்தின.

இருப்பினும், சேறு, அடர்த்தியான சகதியால் நிரம்பிய சுரங்கப்பாதைகளிலிருந்து இதுவரை சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இதனால், உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கை மிகவும் குறைந்து வருகிறது.

அகழ்வுப் பணியாளர்கள் இரவு வெகுநேரம் வரை தொடர்ந்து பணியாற்றினர்.

ஆனால் அவர்கள் தோண்டிக் கொண்டிருந்த குழிக்குள் அதிக அளவு தண்ணீர் பாயத் தொடங்கியதால், மீட்புப் பணியாளர்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று இராணுவம் கூறியது.

உயரமான மலைப்பகுதிகளில் ஏற்பட்ட பனியாறு சரிவினால் உருவான குளிர்ந்த நீர், பாறைகள் மற்றும் இடிபாடுகளின் வெள்ளம் தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்து, குடியிருப்புகளை அழித்து, நேபாளத்தில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 4,500 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களில், 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, நேபாளத்தில் 583 வெளிநாட்டினரும், சீனாவில் 261 பேரும் அடங்குவர்.

நேற்று வரை 1,050 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 3,916 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் நேபாளம் கூறியது. சீன அரசு ஊடகங்கள் 16 பேர் உயிரிழந்ததாகவும், 546 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset