நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: 

அமெரிக்கா​வில் இந்திய தேசியக் கொடியை அவமதித்த போராட்டக்காரர்களுக்கு ஒன்றிய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கடும் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தனது நூற்​றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்​சிகளை நடத்தி வரு​கிறது. 

இதன் ஒரு பகு​தி​யாக, ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் அமெரிக்​கா​வின் நியூயார்க் நகரில் கடந்த சனிக்​கிழமை உரை​யாற்​றி​னார். அப்போது, மேடிசன் ஸ்கொயர் கார்​ட​னுக்கு வெளியே போராட்டத்தில் ஈடு​பட்​ட​வர்​கள் இந்​திய தேசி​யக் கொடியை காலில் மிதித்​தும் கிழித்​தும் அவம​தித்​தனர் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்​பாக, ஒன்றிய அமைச்​சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அரசி​யல் ரீதி​யான கருத்து வேறு​பாடு​கள் இருப்​ப​தில் தவறில்​லை. ஆனால், நாட்டை அவம​திப்​பதை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. ஆர்​எஸ்​எஸ், பாஜக அல்​லது அரசை விமர்​சிக்க முழு சுதந்​திரம் உள்​ளது. ஆனால், நமது நாட்டை அவம​திக்​கக் கூடாது.

இதை கவன​மாகக் கேட்​டுக் கொள்​ளுங்​கள். தேசி​யக் கொடியை​யும், நாட்​டை​யும் அவம​திக்​காதீர்​கள். மீறி​னால் அதற்​காக நீங்​கள் மிகப்​பெரிய விலை​யைக் கொடுக்க வேண்டியிருக்​கும்” என்று கூறி​யுள்​ளார். 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஈடுபடாததோடு வெள்ளையர்களுக்கு ஆதரவளித்து காட்டிக் கொடுத்து வந்தனர் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset