நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக ஆளும் உ.பி.யில் லஞ்சப் பணத்தை நேர்மையாக பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த மாநகராட்சி கவுன்சிலர்கள்: வைரலாகும் காணொலி

லக்னோ: 

பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜ​கான்​பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்​தி​யம் செய்​து, உறுதி மொழி எடுத்த ஒரு வீடியோ சமூக ஊடகங்​களில் வைரலாகி உள்ளது. 

லஞ்​ச​மாக கிடைக்​கும் பணத்தை தங்​களுக்​குள் நேர்மையாக பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக அவர்​கள் உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

அந்த வீடியோ​வில், ஒரு​வர் தண்ணீர் பாட்​டிலில் உள்ள கங்கை நீரை அங்​குள்ள மற்ற நபர்​களின் கைகளில் ஊற்​றுகிறார். அதன் பிறகு அவர் “மாநக​ராட்​சிக்கு கிடைக்​கும் லஞ்சப் பணம் 60 கவுன்​சிலர்​களுக்​கும் சமமாகப் பகிரப்​படும். குழு​வில் உள்ள யாருக்​காவது பிரச்​சினை ஏற்​பட்​டால், அனை​வரும் ஒற்​றுமை​யாக அவருக்கு ஆதர​வாக நிற்போம்” என சத்​தி​யம் செய்​கிறார்.

அதைத் தொடர்ந்து மற்ற அனை​வரும் அதே வாக்​கி​யங்​களை மீண்​டும் கூறி சத்​தி​யம் செய்​கின்​றனர். மேலும், அந்த வீடியோவில் சத்​தி​யத்தை மீறிய ஒரு​வரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்​பெற்​றுள்​ளது. இந்த வீடியோ கவுன்​சிலர்​கள் மீது ஊழல் குற்​றச்​சாட்​டு​களை கிளப்​பி​யுள்​ளது.

யோகி ஆதித்ய நாத் தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset