நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் வேகமெடுக்கும் எச்1என்1 இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: இந்திய மருத்துவக் கழகம் முக்கிய எச்சரிக்கை

புது டெல்லி:

பருவமழைக் காலத்தில் பரவக்கூடிய எச்1என்1 இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு ஸ்வைன் ஃப்ளூ - பன்றிக்காய்ச்சல் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துவருகிறது.

இந்த சூழலில், பொது மக்கள் தாங்களாகவே ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்றும், தீவிர அறிகுறிகள் தென்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய மருத்துவக் கழகமான ஐஎம்ஏ அறிவுறுத்தியுள்ளது.

எச்1என்1 இன்ஃப்ளூயன்சா பாதிப்பு டெல்லியில் கணிசமாக உயர்ந்துள்ளதாக இந்திய சுகாதாரத் துறை கூறுகிறது.

டெல்லியில் மட்டும் 1770 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

மேலும், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்குவங்கத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறும் ஐஎம்ஏ, அதன் நிமித்தமாகவே பொது மக்களுக்கு இந்த அறிவுரையை வெளியிடுவதாகவும் எச்சரித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset