நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் மாநிலத்தில் 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம்: ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா கலந்து சிறப்பித்தார் 

ஈப்போ: 

69ஆவது பேராக் மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டம் இன்று டத்தாரான் ஈப்போவில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த தேசிய தின கொண்டாட்டத்தில் பேராக் மாநில ஆட்சியாளர், மேன்மை தங்கிய சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

பேராக் மாநில அரசு இலாகா, மாநில நிர்வாக அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர். 

நாட்டின் தேசிய பண், நெகாராக்கூ உடன் தொடங்கிய இந்த தேசிய தின கொண்டாட்டத்தில் பாரம்பரிய நடனங்கள், மூவின மக்களின் அணிவகுப்புகள், படைப்புகள் என அனைத்து இடம்பெற்றிருந்தன. 

தேசிய தின கொண்டாட்டம் முடிந்த நிலையில் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா பொதுமக்கள் பார்த்து கையசைத்து தனது தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset