நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டம்: காஜாங்கில் 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு 

காஜாங்: 

நாட்டின் 69ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் சிலாங்கூர் மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டம் நேற்றிரவு சிறப்பாக நடைபெற்றது 

மலேசியா மடானி, அனைவருக்குமான நல்வாழ்வு என்ற கருப்பொருளுக்கு ஏற்ப இந்த கொண்டாட்டம் அமைந்திருந்தது. 

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

அரசாங்க நிறுவனங்கள், மாநில இலாகாக்கள் என சுமார் 69 குழுக்கள் இந்த மெர்டேக்கா அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 

ஏழு முறை முழங்கப்பட்ட  MERDEKA முழக்கங்கள், வாணவேடிக்கை நிகழ்ச்சி மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றால் அந்தக் கொண்டாட்டம் மேலும் களைகட்டியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset