செய்திகள் மலேசியா
அஸ்மின் மீண்டும் கெஅடிலான் கட்சிக்கு அழைக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது: பிரதமர்
கோலாலம்பூர்:
முன்னாள் கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமது அஸ்மின் அலி கட்சிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார் என்ற கூற்று குறித்து எனக்கு தெரியாது.
பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அவருக்கு விடுக்கப்பட்ட எந்த அழைப்பு குறித்தும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
யாராவது அவரை அழைத்தார்களா? அழைப்பு ஏதும் இருந்ததா? எனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னாள் கட்சி உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், தற்போது பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டத்தோஶ்ரீ அஸ்மின், கெஅடிலான் கட்சியில் மீண்டும் சேர மறுத்தது குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டபோது டத்தோஶ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.
தற்போது தான் இணைந்துள்ள பெர்சத்து கட்சி, அதன் அரசியல் இருப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்திற்கு ஒரு தளமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்ததாக அஸ்மின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2026, 12:30 pm
நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் காணாமல் போயினர்
August 27, 2026, 12:29 pm
நேப்பாள வெள்ளம்: உடனடி நிவாரணப் பணிகளுக்கு பிரதமர் உத்தரவு
August 27, 2026, 12:07 pm
ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகராக பூலோ கசாப் சட்டமன்ற உறுப்பினர் சஹாரி சரிப் நியமனம்
August 27, 2026, 10:33 am
நேப்பாள வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை
August 27, 2026, 10:20 am
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை இஸ்மாயில் சப்ரி மறுத்தார்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:55 pm
