நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை இஸ்மாயில் சப்ரி மறுத்தார்

கோலாலம்பூர்:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (MACC) தனது சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறியதாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள், தங்கக் கட்டிகள் ஆகியவற்றை அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்; அதாவது, தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.

MACC சட்டத்தின் பிரிவு 36(2)-ன் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 1,00,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படும் நாணயங்களில் RM14.7 மில்லியன், S$6 மில்லியன், US$1.46 மில்லியன், 3 மில்லியன் சுவிஸ் பிராங்குகள், €12.2 மில்லியன், ¥363 மில்லியன், £50,250, NZ$44,600, 34.8 மில்லியன் திர்ஹம்கள் மற்றும் A$352,850 ஆகியவை அடங்கும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset