நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையிலான ஒத்துழைப்பை நிர்வகிக்க அமிரூடினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: அன்வார்

செர்டாங்:

மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையிலான ஒத்துழைப்பை நிர்வகிக்க டத்தோஸ்ரீ அமிரூடினுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி இடையே சாத்தியமான ஒத்துழைப்பு தொடர்பான சிக்கல்களை நிர்வகிக்க நம்பிக்கை கூட்டணி தேர்தல்கள் இயக்குநருனான அவர் பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று புத்ராஜெயாவில் அமிரூடினுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விஷயம் பேசப்பட்டது.

நாங்கள் இந்தப் பணியை அமிரூடினிடம் ஒப்படைத்துள்ளோம். அவரால் இதைக் கையாள முடியும்.

தேசிய அளவிலான மௌலிதுர் ரசூல் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset