நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்கை அர்செனல் அணியினர் வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியை அர்செனல் அணியினர் வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற புதிய சீசனுக்கான முதல் ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கோவென்ரி சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் கோவென்ரி சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

காய் ஹாவர்ட்ஸ், புகாயோ சகா, மார்ட்டின் ஒடேகார்ட் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணி மூன்று புள்ளிகளையும் எளிதாகக் கைப்பற்றியது.

மேலும் கடந்த சீசனை முடித்த இடத்திலேயே அதாவது லீக் அட்டவணையின் உச்சியில் புதிய சீசனைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset