செய்திகள் மலேசியா
சரவாக் மாநில கொடியை மிதித்த டிக் டாக் பயனர்: போலிஸ் தீவிர விசாரணை
கூச்சிங்:
சரவாக் மாநில கொடியை மிதித்த சம்பவம் தொடர்பாக டிக்டாக் சமூக ஊடக பயனர் ஒருவரிடம் போலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கூச்சிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு இரண்டு புகார்கள் வந்துள்ளதாக கூச்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP அலெக்சன் நாகா சாபு தெரிவித்துள்ளார்.
ஐந்து வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை ஒரு டிக் டாக் பயனர் பதிவேற்றம் செய்துள்ளார்
பின்னர் இந்த வீடியோ பிற சமூக வலைதள கணக்குகளிலும் வேகமாகப் பகிரப்பட்டுள்ளது.
அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்தித் தவறான அல்லது அருவருப்பான கருத்துகளைப் பரப்பியதற்காகத் தகவல் தொடர்புகள் மற்றும் பன்முக ஊடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233-இன் கீழும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம், ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது பொதுமக்களின் கோபத்தைத் தூண்டும் வகையிலோ நடக்க வேண்டாம் என்று காவல் அதிகாரி அலெக்சன் எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் கூச்சிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 082-244444 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 5:52 pm
இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM 7,000 ரிங்கிட் அபராதம் விதிப்பு
August 21, 2026, 5:43 pm
பினாங்கு மிரட்டல் வழக்கு: பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் கைது
August 21, 2026, 5:09 pm
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு RAPID KL சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
August 21, 2026, 4:07 pm
வேப் மின் சிகரெட் பயன்பாட்டுக்கு தடை; பேரா அரசுக்கு எதிராக இரு தரப்பினர் வழக்கு: டத்தோ சிவநேசன்
August 21, 2026, 3:34 pm
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி: போலிஸ் விசாரணை
August 21, 2026, 3:20 pm
ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: டத்தோஶ்ரீ அன்வார் தகவல்
August 21, 2026, 1:20 pm
