நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி: போலிஸ் விசாரணை 

கிள்ளான்: 

கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று கொள்ளை முயற்சி நடந்தது என்பதை கிள்ளான் போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 394இன் போலிஸ் விசாரணையை நடத்தி வருவதாக தென் கிள்ளான் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டென்ட் கமாலரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்

இக்குற்றத்திற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கியைக் காட்டிய குற்றத்திற்காக, 1971 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டத்தின் (கடுமையான தண்டனைகள்) பிரிவு 4 இன் கீழும் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக  ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது சுலைமி அலவி @ ஷாரியை 014-5719405 என்ற எண்ணிலோ அல்லது தெற்கு கிள்ளான் தலைமைப் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு அறையை 03-33762222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset