நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங்  ஹாஜி, ஃபெல்டா மீதான நடவடிக்கை தவறுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது; மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் அல்ல: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

தபோங் ஹாஜி, ஃபெல்டா போன்ற நிறுவனங்களை அவற்றின் இஸ்லாமிய அடையாளத்தின் காரணமாக அரசாங்கம் குறிவைக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ  அன்வர் இப்ராஹிம் மறுத்தார். 

இன அல்லது மதப் பாரபட்சங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மாறாக நிர்வாகக் குறைபாடுகளின் காரணமாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.

தோல்விகளுக்காக அரசாங்கத்தின் தலையீட்டை எதிர்கொண்ட ஃபெல்டா போன்ற பிற நிறுவனங்களுக்கும் இதே போன்ற கண்காணிப்பு பொருந்தும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்லாமிய நிறுவனங்கள் நியாயமற்ற கண்காணிப்பை எதிர்கொள்கின்றன என்றும், முஸ்லிம்களிடையே ஊழலுக்கு எதிராக நம்பிக்கை ஒரு தடையாகச் செயல்படுகிறது என்றும் வாதிட்ட பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கூற்றுகளுக்கு அன்வார் பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset