செய்திகள் மலேசியா
கேசியா நிஷா மரண வழக்கு; பகடிவதை, இனவெறி குறித்த உள் விசாரணையை உத்தரவு: கல்வியமைச்சு
புத்ராஜெயா:
தலைநகரில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு இடைநிலைப் பள்ளி மாணவியின் மரணம் குறித்த உள் விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும்.
மாவட்டக் கல்வி இலாகா, கூட்டாட்சிப் பிரதேச கல்வித் துறை ஆகியவற்றுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பகடிவதை, இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட, பொது அக்கறைக்குரிய அனைத்து விஷயங்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, உண்மைகள், உரிய நடைமுறைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கல்வியமைச்சர் பட்லினா சிடேக் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்ற எங்கள் பிள்ளை சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் எனது எண்ணங்களும் அனுதாபங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன.
இந்த விவகாரம் முழுமையாகக் கையாளப்படுவதை உறுதி செய்வதற்காக, கல்வியமைச்சு போலிஸ்க்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதுடன், சமூக நலத்துறை, மலேசிய சுகாதார அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளி ஊழியர்களுக்கும் உரிய கவனமும் ஆதரவும் அளிக்கப்பட்டு வருவதாக பட்லினா கூறினார்.
கல்வியமைச்சின் ஆலோசகர் குழுவால் குடும்பத்தினருக்கு உளவியல் சமூக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் விசாரணை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்,நல்வாழ்வுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 5:52 pm
இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM 7,000 ரிங்கிட் அபராதம் விதிப்பு
August 21, 2026, 5:43 pm
பினாங்கு மிரட்டல் வழக்கு: பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் கைது
August 21, 2026, 5:12 pm
சரவாக் மாநில கொடியை மிதித்த டிக் டாக் பயனர்: போலிஸ் தீவிர விசாரணை
August 21, 2026, 5:09 pm
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு RAPID KL சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
August 21, 2026, 4:07 pm
வேப் மின் சிகரெட் பயன்பாட்டுக்கு தடை; பேரா அரசுக்கு எதிராக இரு தரப்பினர் வழக்கு: டத்தோ சிவநேசன்
August 21, 2026, 3:34 pm
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி: போலிஸ் விசாரணை
August 21, 2026, 3:20 pm
